1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai people facing power cut for few days

சென்னையில் இரவு பகலாக பல மணி நேரம் மின்வெட்டு!.. பொதுமக்கள் அவதி....

power cut
பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாவது மின்வெட்டு நேரங்களில்தான். அதுவும் வெயில் காலத்தில் ஏற்படும் மின்வெட்டுக்களால் மக்கள் பெரும் அவதி அடைகிறார்கள். ஒருமுறை தமிழகத்தில் நடந்த தொடர் மின்வெட்டு திமுக அரசு தோல்வியடைவே காரணமாக இருந்தது.

தற்போது கோடை காலம் நிலவும் நிலையில் ஏற்படும் மின்வெட்டுகளால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கடும் அவதி அடைந்திருக்கிறார்கள்..

சென்னை விம்கோ நகர், பாரதியார் நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இரவு மின்வெட்டு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மின்வாரிய அலுவலக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின் மின்வாரியத்துறை அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்
. இப்போது தமிழகத்தில் தவெக ஆட்சி நிலவும் நிலையில் இந்த மின்வெட்டு பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்ப்படுத்தியிருக்கிறது..

நேற்று செய்தியாளிடம் பேசிய மின்வாரியத்துறை அமைச்சர் சிடி நிர்மல் குமார் கடந்த ஆட்சியில் மின்சார துறையில் பல முறைகேடுகள் நடந்திருக்கிறது. மின்சார துறையில் 2.5 கோடி கடன் இருக்கிறது.. போதிய ஊழியர்களும் இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன்? தமிழக அரசின் உத்தரவில் சொல்லப்பட்டிருப்பது என்ன?