திங்கள், 16 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

டிமாண்டி சாலை' பெயர் மாற்றம்.. எம்.எஸ்.விஸ்வநாதன் பெயரை சூட்டிய முதல்வர் ஸ்டாலின்..!

டிமாண்டி சாலை'  பெயர் மாற்றம்.. எம்.எஸ்.விஸ்வநாதன் பெயரை சூட்டிய முதல்வர் ஸ்டாலின்..!
தமிழகத்தின் கலை வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த இசை மேதைகளை கௌரவிக்கும் வகையில், சென்னை மாநகரின் முக்கிய சாலைகளுக்கு அவர்களின் பெயர்களை சூட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று புதிய பெயர்ப்பலகைகளை திறந்து வைத்தார். 
 
'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன், பாடகர்கள் சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் திருச்சி லோகநாதன் ஆகியோரது பெயர்கள் இனி அவர்கள் வாழ்ந்த வீதிகளின் அடையாளமாக மாறும். 
 
குறிப்பாக, ஒரு காலத்தில் அச்சத்துடன் பார்க்கப்பட்ட ஆழ்வார்பேட்டை 'டிமாண்டி சாலை' இனி 'எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை' என்று அழைக்கப்படுவது அந்த பகுதிக்கு ஒரு நேர்மறையான கலாச்சார அடையாளத்தைத் தந்துள்ளது.
 
மந்தைவெளியின் கிழக்கு வட்டச் சாலை சீர்காழி கோவிந்தராஜன் பெயரிலும், நார்ட்டன் 3-வது தெரு திருச்சி லோகநாதன் பெயரிலும் மாற்றம் பெற்றுள்ளன. ஏற்கனவே கலைவாணர், சிவாஜி கணேசன், கண்ணதாசன் போன்ற ஆளுமைகளின் பெயர்கள் சென்னையின் வீதிகளில் ஒலிக்கும் நிலையில், தற்போதைய இந்த அறிவிப்பு இசைத்துறையினருக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரமாகும். 
 
Edited by Siva