தொடர்புடைய செய்திகள்
- அடுத்த சில மணி நேரங்களில் 6 மாவட்டங்களில் மழை! - வானிலை ஆய்வு மையம்!
- இன்றிரவு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
- வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: வானிலை ஆய்வு மையம்..!
- அடுத்த 3 மணிநேரத்தில் இடி மின்னலுடன் மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
- தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
இன்று இரவு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கொட்டப்போகிறது கனமழை: வானிலை எச்சரிக்கை..!
தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியில் உள்ள அறிவிப்பில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் குறிப்பாக வலுவான தரைக்காற்று காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran
