தொடர்புடைய செய்திகள்
- சென்னை ஐகோர்ட்டில் இன்று முதல் நேரடி விசாரணை கிடையாது: பதிவாளர் அறிவிப்பு!
- சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன?
- சென்னையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு அறை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- இன்னும் ஒரு மணி நேரத்தில் கனமழை: 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
- ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி; வார்டுகளில் கண்காணிப்பு! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இன்றும் நாளையும் தென்மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை
இன்றும் நாளையும் தென் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தின் கடற்கரை பகுதியை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியிலும் தென் மேற்கு வங்க கடலில் வழி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் மீண்டும் இன்றும் நாளையும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது அம்மாவட்ட மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை உள்பட வட மாவட்டங்களில் இன்று வறண்ட வானிலையே காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
