தொடர்புடைய செய்திகள்
- பிரதமர் மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை.. 3 நாள் மழைக்கு தாங்காமல் இடிந்ததா?
- வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!
- தமிழகத்தில் ஒரு வாரம் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
- இன்று முதல் ஆகஸ்ட் 28 வரை மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
- இன்று மாலை 12 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இன்று காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!
இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
மேலும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ளதால் இன்னும் ஒரு நாளில் தமிழக கடலோர பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து மேற்கண்ட 5 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
Edited by Siva
