1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai Meteorological center warns about rain

4 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

கனமழை
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்றும் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
 
இன்று மதுரை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அது மட்டுமின்றி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர் மோடி: திமுக கலந்து கொள்ளுமா?