திங்கள், 5 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 ஜூலை 2021 (12:23 IST)

நீதிபதிகள், வழக்கறிஞர்கள் முன்கள பணியாளர்கள் இல்லை! – நீதிமன்றம் உத்தரவு!

நீதிபதிகள், வழக்கறிஞர்கள் முன்கள பணியாளர்கள் இல்லை! – நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு எதிராக செயலாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க கோரி ஜோதிபாசு என்பவர் மனு அளித்திருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணையில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க முடியாது என வழக்கை தள்ளுபடி செய்தது.