1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (11:34 IST)

சென்னையில் லிவிங்-டுகெதர் வாழ்ந்த தம்பதி திடீர் தீக்குளிப்பு!

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த தம்பதிகள் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது
 
சென்னை பெரியமேடு அடுத்த சூளை நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 40 வயது சந்திப் ஜெயின் என்பவரும் 35 வயது இளைச்சி என்பவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவின் டுகெதர் முறையில் வசித்து வந்தனர் 
 
இந்த நிலையில் நேற்று திடீரென இருவரும் தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகவும் அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது
 
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் இளைச்சி சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்ததாகவும் சந்திப் ஜெயின் மட்டும் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.