1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 ஜனவரி 2022 (23:23 IST)

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,  பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து  நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி , ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கியுள்ளது.  மேலும், வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.