தொடர்புடைய செய்திகள்
- அடுத்த 2 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை! – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
- உத்தர பிரதேச தேர்தலில் பாஜக படுதோல்வி: சுயேட்சை வேட்பாளர் வெற்றி!
- சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை.. தவறினால் அபராதம்! – சென்னை மாநகராட்சி!
- ஆன்லைன் சூதாட்டம் அழிச்சுடும்.. சீக்கிரம் எதாவது பண்ணுங்க! – ராமதாஸ் கோரிக்கை!
- எந்த வகை கொரோனாவையும் தடுக்கத் தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்தி திணிப்பை நாங்களே அனுமதிக்க மாட்டோம்! – ஆச்சர்யப்படுத்திய அண்ணாமலை!
தமிழகத்தில் இந்தி திணிப்பை பாஜக ஒருநாளும் அனுமதிக்காது என தமிழக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இந்தியை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வதாக பல கட்சிகள் குற்றம் சாட்டி பேசி வருகின்றன.
இதுகுறித்து பேசியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “தமிழகத்தில் இந்தி திணிப்பை பாஜக ஒருநாளும் அனுமதிக்காது. ஏ.ஆர்.ரஹ்மான் தமிழை இணைப்பு மொழி என கூறியதை வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு குறித்து பேசிய அவர், இந்த நுழைவு தேர்வால் தமிழக மாணவர்கள் பிற மாநிலங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
