10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆட்சியர் அலுவலகம் எதிரே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓட்டுநர்கள் பங்கேற்றனர். விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் ஓட்டுநர்களுக்கு...