தொடர்புடைய செய்திகள்
- கத்தியை காட்டி மிரட்டி வாக்கு சேகரிப்பு; காங்கிரஸ் வேட்பாளர் கணவர் கைது!
- யாருக்கும் ஆதரவு இல்ல.. தனித்துதான் போட்டி! – விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு!
- சமூகநீதி கூட்டமைப்புக்கு ஆதரவு! – மெகபூபா முப்தி கடிதம்!
- நீட் தேர்வு விலக்கு மசோதா: இன்று சட்டமன்ற சிறப்புக்கூட்டம்!
- ஆர்யாவுக்கு நன்றி கூறிய சூர்யா பட நடிகை !
கடிதத்தை பொதுவெளியில் விடுவது சரியான செயலா? – ஆளுனருக்கு சபாநாயகர் கேள்வி!
நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து விளக்க கடிதத்தை பொதுவெளியில் பகிர்வது சரியா என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுனர் ஆர்.என்.ரவி அதை மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்படுகிறது. மருத்துவ மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்துள்ளார். முன்னதாக பேசிய சபாநயகர் அப்பாவு, நீட் தேர்வு விலக்கு மசோதாவை திரும்ப அனுப்பியது குறித்த கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது சரியான செயலா என ஆளுனருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை எந்த ஆளுனரும் இதை செய்ததில்லை என்றும் அவர் பேசியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
