தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம்: வெளிநடப்பு செய்த பாஜக
- இபிஎஸ் கடிதத்தை சபாநாயகர் மதிக்கனும் - ஜெயகுமார் பேட்டி!
- சட்டமன்றமே எங்களை அங்கீரித்தது… பாசிட்டிவ் வைப்-புடன் ஓபிஎஸ்!
- சட்டமன்றத்தில் இதைப்பற்றி பேசக்கூடாது: அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஈபிஎஸ் உத்தரவு!
- 6 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழக சட்டமன்றம் ஒரு அறிவாலயமாக செயல்படுகிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆவேசம்
தமிழக சட்டமன்றம் தற்போது அண்ணா அறிவாலயம் போல் செயல்பட்டு வருகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியபோது சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி இயங்கவில்லை என்றும் ஜனநாயக படுகொலை அரங்கேற்றி வருகிறது என்றும் கூறினார்
காலங்காலமாக கடைபிடித்து வரும் மரபுகளில் சட்ட விதிகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. சட்டமன்றத்தை பொறுத்தவரை ஒரு அண்ணா அறிவாலயம் ஆக அதாவது திமுக தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது
எனவே மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் பேரவையின் கண்ணியத்தை காப்பாற்றவும் ஜனநாயகப் படுகொலையை அரங்கேறாமலும் சட்டமன்றம் நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே என்பதே எங்களது வேண்டுகோள் என்று ஜெயகுமார் தெரிவித்துள்ளார்
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
