1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2022 (13:03 IST)

ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம்: ஓபிஎஸ்-க்கு சம்மன் அனுப்ப திட்டம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக விசாரித்து வருகிறது என்பது தெரிந்ததே. 

 
இந்த நிலையில் சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை செய்த ஆறுமுகசாமி ஆணையம் தற்போது முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களிடமும் விசாரணை செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம் விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களிடம் விசாரணை செய்வதற்காக வரும் 15ஆம் தேதிக்கு பின்னர் சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.