தொடர்புடைய செய்திகள்
- எப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் எனத் தெரியும்: சசிகலா
- இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் தேதி: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
- ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு
- சிவசேனா கட்சி சின்னம் முடக்கம்: இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி
- அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள்: நடத்தை விதிகளில் புதிய திருத்தம்!
ஜெயலலிதா மரணத்தில் சசிகலா குற்றம் செய்தவர்: சட்டசபையில் ஆணையின் அறிக்கை!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா குற்றம் செய்தவர் என்று ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருப்பதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் அவர் மீது விசாரணை செய்ய பரிந்துரை செய்ததாகவும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆணைய அறிக்கையில் தகவல் தெரிவிப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என்பதும், இந்த ஆணையம் ஒரு சில ஆண்டுகளாக விசாரணை செய்து சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை அறிக்கையில் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், சிவகுமார் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்கிறது என்றும் எனவே அவர்கள் மீது விசாரணைக்கு பரிந்துரைத்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
