1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (22:38 IST)

ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு

eknath shinde
மஹாராஸ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு பாலாசாகேபஞ்ச்சி சிவசேனா என்ற பெயர் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்  அக்கட்சிக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மறும் சிவசேனா அதிருப்திக் குழு தலைவர் ஷிண்டே ஆகியோர் தலைமையில் 2 பிரிவாக உள்ளது.

இந்த நிலையில், அடுத்த மாதம் 3 ஆம் தேதி அந்தேரி கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. இத்தொகுதியில், உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ ரமேஷ் லட்கேவின் மனைவி போட்டியிடுகிறார்.

இந்த  நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு வில், அம்பு சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று ஷிண்டே தேர்தல் ஆணையத்திடம் கூறிய நிலையில், இரு தரப்பினரும் வேறறு பெயர் மற்றும் சின்னத்துடன் போட்டியிடும்படி கூறியது.

இந்த நிலையில் ஷிண்டே அணிக்கு பாலாசாகேபஞ்சி சிவசேனா என்ற பெயருடன் இரட்டை வாள் – கேடயம் சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

Edited by Sinoj