1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 21 மார்ச் 2022 (17:07 IST)

இன்று மட்டும் 78 கேள்விகள்: நாளையும் ஆஜராக ஓபிஎஸ்-க்கு உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் இன்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆஜராகியதையடுத்து அவரிடம் 78 கேள்விகள் கேட்க பட்டதாக கூறப்படுகிறது 
 
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்ற பதில் தான் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பன்னீர்செல்வம் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நாளையும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
நாளை அவரிடம் கேட்கப்படும் கேள்விகள் என்னென்ன என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன