தொடர்புடைய செய்திகள்
- இறுதிச்சடங்கு செய்யப்பட்ட கணவர் நேரில் வந்தார் - மனைவி இன்ப அதிர்ச்சி
- மனைவிக்கு குடிநீரில் ஆசிட் கலந்து கொடுத்த கொடூர கணவன்!!
- பிரிந்த மனைவிக்கு ஜீவனாம்சம் தர தேவையில்லை - எப்போது தெரியுமா?
- புளூவேல் விபரீதம் ; ஆற்றில் குதிக்க சென்ற மாணவி மீட்பு
- அனிதா மரணத்தில் மர்மம்; நீட் குறித்து அவதூறு பரப்பும் நக்சலைட், ஜிகாதிகள்: அர்ஜூன் சம்பத் புகார்!
அர்ஜூன் சம்பத் மனைவி தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மனைவி சுப்புரத்தினம் நேற்று இரவு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜீன் சம்பத்திற்கு இரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் ஓம்கார் பாலாஜி(22). இவர் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். அதேபோல், அவரின் இளைய மகன் பள்ளியில் படித்து வருகிறார். சுப்புரத்தினம் கோவை குறிச்சி பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு சுப்புரத்தினத்திற்கும், அவரின் மூத்த மகன் பாலாஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த சுப்புரத்தினம் 17 தூக்க மாத்திரைகளை போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதையடுத்து அவர் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டுரையில்
