தொடர்புடைய செய்திகள்
- நெல்லை மைதானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரம்: அண்ணாமலை ட்விட்..!
- நவோதயா பள்ளிகளைத் தமிழக அரசு தடுப்பது முறையா?- அண்ணாமலை
- ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. - சரத்பாபு மறைவுக்கு கமல்ஹாசன் அஞ்சலி
- 'தமிழகத்தில் மீண்டும் கள்ளு கடைகளை திறக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்..!
- 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? அண்ணாமலை பதில்..!
இந்து சமய அறநிலையத் துறை எதற்கு, அமைச்சர் எதற்கு? அண்ணாமலை ஆவேச கேள்வி..!
கோவில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் இந்து சமய அறநிலையத் துறை எதற்கு, அமைச்சர் எதற்கு? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நேற்று நள்ளிரவு, திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்குள் சமூக விரோதிகள் புகுந்து, சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தபின், கோவில்கள் தாக்கப்படுவதும், மக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதும் தொடர்கிறது. ஆனால், உண்மையான குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படுவதாகத் தெரியவில்லை.
கைது செய்யப்படுபவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி குற்றத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியே தொடர்வதாகத் தெரிகிறது.
கோவில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் இந்து சமய அறநிலையத் துறை எதற்கு, அமைச்சர் எதற்கு?
உடனடியாக, உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இனியும் இது போல கோவில்கள் தாக்கப்படுவது தொடர்ந்தால், அதன் எதிர்விளைவுகளுக்கு திமுக அரசே பொறுப்பு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Edited by Mahendran
