விஜயை ரெண்டு வெளு வெளுன்னு சொன்னாங்க!.. ஆனா அது தப்பு!.. அண்ணாமலை டீசண்ட்!..

திங்கள், 13 ஜூலை 2026 (12:17 IST)
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது. அரசியல் கட்சி துவங்கியதில் இருந்தே தவெக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் விஜய் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. செய்தியாளர் சந்திப்பை நடத்துவதுமில்லை.. செய்தியாளர்கள் கேள்விகளுக்கும் அவர் பதில் சொல்வதும் இல்லை. செய்தியாளர்கள் அவரை கூப்பிட்டாலே அங்கிருந்து சென்று விடுகிறார்.

இதை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி ஆகியோர் கடுமையான விமர்சனமாக முன்வைக்கிறார்கள், ஆனால் தேவையானபோது முதலமைச்சர் விஜய் பேசுவார் என தவெக அமைச்சர்கள் சொல்லி வருகிறார்கள்..

இந்நிலையில்தான், வி த லீடர்ஸ் இயக்கத்தின் முதல் மாநாடு என்ற பொள்ளாச்சியில் நேற்று நடந்தது. அந்த விழாவில் பேசிய அந்த இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை ‘தவெக ஆட்சி வந்த பிறகு ஏன் விஜய் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்று ரெண்டு வெளு வெளுத்துவிடுங்கள்’ என்று நிறைய பேர் என்னிடம் சொன்னார்கள். அவர்களுக்கெல்லாம் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்..

2026 தேர்தலில் ஒரு கோடியே லட்சம் பேர் தவெகவுக்கு வாக்களித்து அந்த கட்சியை தேர்வு செய்திருக்கிறார்கள்.. அதற்கு நாம் மரியாதை கொடுப்பது நமது கடமை என்று கூறினேன்.. மேலும், மிகவும் கஷ்டப்பட்டு அடித்தட்டு மக்கள் பலரும் அந்த கட்சியில் இணைந்து தற்போது எம்எல்ஏவாக மாறியிருக்கிறார்கள். அவற்றில் சிலர் அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள்.. ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறத்தான் இருக்கத்தான் செய்வார்கள்.. அவர்களை நாம் தாங்கி பிடித்துக் கொள்ள வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.<>

எல்லாம் காட்டு

தமிழக அரசின் தீவிர முயற்சி.. வியட்நாமில் இறந்த 10 தமிழர்களின் உடல் இன்று வருகை...

சென்னையில் பள்ளி மாணவர்களுக்காக 42 கூடுதல் பேருந்துகள்: தமிழக முதல்வர் விஜய் உத்தரவு...

கலைஞர் பேனா சின்னத்தை உடைப்பவர் நண்பர்!. நான் எதிரியா?!.. திமுகவுக்கு திருமா கேள்வி!...

எப்போது ஸ்டாலினுக்கு கோபம் வருகிறதோ, அப்போது தவெக ஆட்சி முடிந்துவிடும்: ராஜேந்திர பாலாஜி..

மன்மோகன்சிங் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார்.. முன்னாள் தேர்தல் கமிஷனர் கூறிய அதிர்ச்சி தகவல்...

அடுத்த கட்டுரையில்
Show comments