1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 14 டிசம்பர் 2021 (16:03 IST)

ராகிங்கில் ஈடுபட மாட்டேன்: பிரமாண பத்திரம் கொடுத்தால் தான் அட்மிஷன்!

ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என்று கூறினால் மட்டுமே அட்மிஷன் என அண்ணா பல்கலை கழகம் உத்தரவிட்டு இருப்பதாகவும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வரும் நிலையில் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது
 
இந்த உத்தரவுப்படி ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது