தொடர்புடைய செய்திகள்
- மீனவர்கள் என்னை தூக்கி சென்றது ஏன்? அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்
- உத்தரவு வரும்வரை மாணவர் சேர்க்கைக்கு தடை! – இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம்!
- காங்கோவில் இருந்து வந்த பெண்ணுக்கு கொரோனா!
- ஒமிக்ரான் பாதிப்பு உள்ளவரோடு இருந்தவர்களுக்கும் கொரோனா! – மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன்!
- தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு - அமைச்சர் கூறுவது என்ன?
கோமாரியால் அதிகமாகும் கால்நடைகளின் உயிரிழப்பு… போதிய தடுப்பூசிகள் தராத மத்திய அரசு- கால்நடைத்துறை அமைச்சர்!
மத்திய அரசு வழங்கவேண்டிய கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசியை இந்த ஆண்டு முழுமையாக வழங்கவில்லை என கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு வழக்கத்தை விட தமிழகத்தில் கால்நடைகள் கோமாரி நோய் தாக்கி அதிகளவில் உயிரிழந்துள்ளன. கடந்த இரண்டு நாட்களில் ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 120 க்கும் மேற்பட்ட ஆடு மாடுகள் உயிரிழந்துள்ளன.
இதுகுறித்து கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பியபோது ஆண்டுதோறும் மத்திய அரசு தமிழகத்துக்கு 90 லட்சம் கோமாரி தடுப்பூசிகள் வழங்கவேண்டும். ஆனால் இந்த ஆண்டு 20 லட்சம் தான் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளுக்கு உரிய காலத்தில் தடுப்பூசி போடமுடியவில்லை. இதன் காரணமாக உயிரிழப்பு அதிகமாகியுள்ளது எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
