வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (18:52 IST)

கண்கலங்கிய அன்புமணி ராமதாஸ். ..வைரலாகும் வீடியோ

சட்டப்பேரவையில் இன்று வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

எம்பிசி-வி என்ற பிரிவு வன்னியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு அதில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வகை செய்கிறது என்றாலும் இந்த மசோதா தற்காலிகமானது என்றும் ஆறு மாதங்களுக்குப் பின்னர் இந்த மசோதா மாற்றி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாசட்டப்பேரவையில் இன்று வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது

எம்பிசி-வி என்ற பிரிவு வன்னியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு அதில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வகை செய்கிறது என்றாலும் இந்த மசோதா தற்காலிகமானது என்றும் ஆறு மாதங்களுக்குப் பின்னர் இந்த மசோதா மாற்றி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்மி அவர்கள் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராதமாஸ் தனது தந்தையும் அக்கட்சியின் நிறுவனருமான மருத்துவர் ராமதாஸிடம் பேசியதாகத் தெரிகிறது.

அப்போது,40 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு தற்போதுதான் பலன் கிடைத்துள்ளது என ஆனந்தக்கண்ணீருடன் பேசியுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் நீண்ட காலமாக ராமதாஸ் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டு கேட்டு போராடிவருவது குறிப்பிடத்தக்கது.