வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 14 டிசம்பர் 2020 (20:23 IST)

பேருந்துக்கு தீ வைத்து எரிப்பு… பரபரப்பு சம்பவம்!!

சென்னை அடுத்துள்ள திருவள்ளூரில் உள்ள பட்டாபிராம் அருகே பாமக இளைஞரணி தலைவர் கார்த்தின் டூவீலர் மீது பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்தப் பேருந்து தீ வைத்து எரித்தனர்.

சென்னை அடுத்துள்ள திருவள்ளூரில் உள்ள பட்டாபிராம் அருகே பாமக இளைஞரணி தலைவர் கார்த்தின் டூவீலர் மீது பேருந்து மோதியதாகத் தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்ததாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அங்குள்ள பொதுமக்கள் ஆவேசமாகப் பேருந்துக்குத் தீ வைத்து எரித்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.