தொடர்புடைய செய்திகள்
- அம்பானி, அதானி ஆகியோருக்கு கீழே சென்ற பேஸ்புக் நிறுவனரின் சொத்து!
- அடுத்த ஆண்டு முதல் பெண்கள் அணிக்கு தனி ஐபிஎல்… கங்குலி அறிவிப்பு!
- அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற மற்றொரு நடிகை!
- சரியும் தினசரி பாதிப்பு; ஆயிரத்திற்கும் மேல் பதிவாகும் மரணங்கள் – இந்தியாவில் கொரோனா!
- சில நேரங்களில் சில மனிதர்கள் – படக்குழுவினரை அழைத்துப் பாராட்டிய கமல்ஹாசன்!
ஒரே நாளில் இரு தேர்வுகள்… அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!
பல்கலைக்கழக பேராசியர் தேர்வில் ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் நடக்க உள்ளது குறித்து பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் கண்டித்துள்ளார்.
இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வில் (NET) கணிதப் பாடத் தேர்வு பிப்ரவரி 16-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதே நாளில், அதே கணிதப் பாடத்திற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேசியத் தகுதித் தேர்விலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்விலும் கணிதப் பாடத் தேர்வை எழுதுபவர்கள் ஒரே போட்டியாளர்கள்தான். இரு தேர்வுகளும் ஒரே நாளில் நடத்தப்பட்டால், ஏதேனும் ஒரு தேர்வை எழுதும் வாய்ப்பு போட்டியாளர்களிடமிருந்து பறிக்கப்படும். இது அநீதியானது.
தேசியத் தகுதித் தேர்வுக்கான அட்டவணை ஜனவரி 17-ம் தேதியே வெளியிடப்பட்டுவிட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை பிப்ரவரி 3-ம் தேதிதான் வெளியானது. தேசியத் தகுதித் தேர்வு நாளில், ஆசிரியர் தேர்வு வாரியம் கணிதப் பாடத் தேர்வை அறிவித்ததுதான் குழப்பங்களுக்கு காரணம் ஆகும்.
தேர்வு அட்டவணை தயாரிப்பது, முடிவுகளை வெளியிடுவது, இடஒதுக்கீடு வழங்குவது என அனைத்திலும் ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பின்றி நடந்து கொள்கிறது. இரு வகை தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்க வசதியாக கணிதப் பாடத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
