1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Anbil Mahesh says about door step education scheme

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுகிறோம்! – அமைச்சர் அன்பில் மகேஷ்!

Tamilnadu
தமிழகத்தில் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நவம்பர் 1 முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளி மாணவர்களின் இடைவெளியை சரிசெய்யும் விதமாக இல்லம் தேடி கல்வி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தால் மாணவர்களின் கற்றல் இடைவெளி குறையும் என்று கூறியுள்ளார். மேலும் முற்றிலும் மாநில அரசின் நிதியில் செயல்படும் இந்த திட்டத்திற்கு எச்சரிக்கை உணர்வுடன் தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், சில கட்சி தலைவர் கூறிய எச்சரிக்கை உணர்வுகளையும் மனதில் கொண்டே திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
எடப்பாடியை துரோகி எனக் கூறிய அதிமுக பிரமுகர்! – கட்சியை விட்டு தூக்கிய ஈபிஎஸ்-ஓபிஎஸ்!