தொடர்புடைய செய்திகள்
- இது ட்ரெய்லர்தான்.. வடபழனி கோவில் சொத்துக்கள் மீட்பு! – அறநிலையத்துறை அதிரடி!
- ஃபேமிலிமேன் தொடரை தடை செய்யுங்கள்.. இல்லைனா..? – அமேசானுக்கு சீமான் கடிதம்!
- ஒழுங்கா சாப்பாடு கூட கிடைக்கல.. பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்!
- ஊரடங்கில் தளர்வுகள்; இ-பதிவு செய்ய குவிந்த மக்கள்! – முடங்கியது இணையதளம்!
- ஊரடங்கில் தளர்வுகள்; இ-பதிவு முறையில் மாற்றம்! – யார் யாருக்கு அனுமதி!
+2 மதிப்பெண்கள் எந்த முறையில் வழங்கப்படும்!? – அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!
தமிழகத்தில் கொரோனா காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதிப்பெண் வழங்கும் முறை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் நடப்பு ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக திமுக ஆட்சியமைத்த நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டது.
இதில் மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து உத்தரவு வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்கள் எதன் அடிப்படையில் வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் “தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
