தொடர்புடைய செய்திகள்
- அழையா விருந்தாளியாக சென்று வாய்கிழிய பேசிய ரஜினி?
- கார்ட்டுனிஸ்ட் பாலாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
- கட்சி தாவும் மாஜி அமைச்சர் மணிகண்டன்? சூப்பர் ஆஃபர் கொடுத்த எதிர்க்கட்சி!
- ரஜினியின் கருத்துக்கு சீமானின் பொறுப்பற்ற பேச்சு: நெட்டிசன்கள் ஆவேசம்!
- மோடிக்கு தெரிவித்த எதிர்ப்பை அமித்ஷாவுக்கு தெரிவிக்காத ஏன்? எங்கே போனார்கள் போராளிகள்?
அமித்ஷா சிபாரிசு... ஆட்சியும் கட்சியும் ஓபிஎஸ் கைக்கு மாற்றம்?
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி மற்றும் கட்சி பொறுப்புகளை கவனிக்க உள்ளார் என தெரிகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாத இறுதியில் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரண்டு வாரங்களுக்கு இந்த சுற்றுப்பயணம் நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு வார காலத்தில் ஓபிஎஸ் கட்சி மற்றும் ஆட்சி பொறுப்பகளை கவனிப்பார் என தெரிகிறது.
ஆம், சமீபத்தில் தமிழகம் வந்திருந்த அமித்ஷாவிடமும் இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாம். இந்த ஆலோசனையின் முடிவில் அமித்ஷாவும் ஓபிஎஸ்-க்கு பலமான சிபாரிசை வழங்கியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், முதல்வருக்கு இதில் துளியும் ஒப்புதல் இல்லை எனவும் கூறப்படுகிறது. இரண்டு வாரம் என்றாலும், ஓபிஎஸுக்கு முழு அதிகாரத்தை கொடுக்க ஈபிஎஸ் விரும்பவில்லையாம்.
ஏற்கனவே இரட்டை தலைமை என அதிமுகவில் அதிருப்திகள் நிலவி வரும் நிலையில் இப்போது ஆட்சியை ஓபிஎஸ் கையில் கொடுத்தால் திரும்பி வருவதற்குள் ஏதேனும் ஆபத்து வருமோ என்ற சந்தேகத்தில் ஈபிஎஸ் தரப்பினர் உள்ளார்களாம்.
அடுத்த கட்டுரையில்
