1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. All chennai tunnels allowed transport

அனைத்து சுரங்கப்பாதைகளிலும் மீண்டும் போக்குவரத்து துவக்கம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னை
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்தது என்பதும் ஒரு சில சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக அனைத்து சாலைகளும் உள்ளன தண்ணீர் வெளியேற்றப்பட்டது என்பதும் குறிப்பாக சுரங்க பாதைகளில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டு ஒவ்வொரு சுரங்கப் பாதைகளையும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப் பாதைகளும் மீண்டும் போக்குவரத்து துவங்க இருப்பதாகவும் மழைநீரால் மூழ்கி இருந்த சுரங்க பாதைகளில் இருந்து முழுவதுமாக நீர் வெளியேற்றப்பட்டதால் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
சென்னை மாநகராட்சியின் மின்னல் வேலை நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
சரவணா ஸ்டோரில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரிசோதனை!