வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (22:58 IST)

மீண்டும் காண்ட்ராக்ட் கான்கிரீட் சர்ச்சை

karur
கரூரில் மின் மோட்டர் வைத்து சாக்கடை கழிவுகள் வெட்ட வெளியில் பொதுமக்களுக்கு நோய் ஏற்படுத்தும் வகையில் மோட்டார் போட்டு தார்சாலையில் சாக்கடை கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.
 
 
கரூர் பேருந்து நிலையம் அரிஸ்டோ கார்னர் பகுதியிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை சாக்கடை வடிகால் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த இடத்திலேயே மீண்டும் கான்க்ரீட் போடும் நிலையில் சாக்கடை ஓடும் நிலையில் கான்க்ரீட் போடப்படும் நிலையில், அந்த கழிவுநீரை அனைத்து வாகனங்களும் செல்லும் இடங்களிலேயே மின் மோட்டர் வைத்து சாக்கடை கழிவுகள் வெட்ட வெளியில் பொதுமக்களுக்கு நோய் ஏற்படுத்தும் வகையில் மோட்டார் போட்டு தார்சாலையில் சாக்கடை கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.

இது ஒரு புறம் இருக்க ஜே.சி.பி இயந்திரம் கொண்டு சாக்கடை கழிவு நீர் இரைக்கப்பட்ட காட்சிகளும், மின் மோட்டார் வைத்து கழிவு நீர் வெட்ட வெளியில் தார்சாலையில் பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் இடத்தில் சாக்கடை நீர் இரைக்கப்படும் காட்சிகள் மனதை பத பத வைக்கின்றன. இது ஒரு புறம் இருக்க சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றன. 
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் கழிவு நீர் தொட்டியில் விழுந்து 3 பேர் விழுந்து இறந்த சம்பவம் இந்திய அளவில் வைரலான சம்பவம் முடிவடைவதற்குள் இந்த சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது