வியாழன், 29 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 17 மார்ச் 2019 (17:43 IST)

இன்று முதல் பெயர் மாறும் டுவிட்டர் கணக்கு: தமிழிசை செளந்திரராஜன் அறிவிப்பு

இன்று முதல் பெயர் மாறும் டுவிட்டர் கணக்கு: தமிழிசை செளந்திரராஜன் அறிவிப்பு
பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜனின் டுவிட்டர் கணக்கு இதுவரை தமிழிசை செளந்திரராஜன் என்ற பெயரில் இருந்து வந்த நிலையில் இன்றுமுதல் பெயர் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து தமிழிசை தனது டுவிட்டரில் 'தற்சமயம் முதல் என்னுடைய டுவிட்டர் கணக்கு  மக்கள் பாதுகாவலர் டாக்டர்  தமிழிசை சௌந்தரராஜன்  ( Chowkidar Dr Tamilisai Soundararajan )  என்று  இயங்கும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களின் டுவிட்டர் கணக்குகளில் அவர்களது பெயருக்கு முன் Chowkidar என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதை பின்பற்றி தமிழிசை அவர்களும் தனது டுவிட்டர் கணக்கின் பெயரை மாற்றியுள்ளார்.
 
இன்று முதல் பெயர் மாறும் டுவிட்டர் கணக்கு: தமிழிசை செளந்திரராஜன் அறிவிப்பு
பாதுகாவலர் என்பதை குறிக்கும் இந்த வார்த்தைக்கேற்றவாறு மக்களின் பாதுகாவலராக மோடி, தமிழிசை உள்பட பாஜகவினர் கடந்த ஐந்து ஆண்டுகளாக இருந்தார்களா? என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.