தொடர்புடைய செய்திகள்
- திடீர் திருப்பம் ; எடப்பாடி அணிக்கு மாறிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ
- சசிகலாவை நீக்கிட்டு தினகரனை மட்டுமாவது சேர்த்துக்கோங்க: ஓபிஎஸ், ஈபிஎஸ் தீவிர ஆலோசனை!
- மீண்டும் சி.ஆர்.சரஸ்வதி: யார் அந்த 9 பேர்?
- முதல்வருக்கு வாபஸா? ஆட்சிக்கு வாபஸா?: கவர்னர் சந்திப்பில் தினகரன் அதிரடியா?
- ஆளுநரை சந்திக்க இருக்கும் தினகரன்: கலக்கத்தில் எடப்பாடி!
முதல்வருக்கான ஆதரவை வாபஸ் பெற்ற கருணாஸ்
ஏற்கனவே 19 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் தற்போது கருணாஸ் உள்ளிட்ட மூன்று பேர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஓபிஎஸ் அணியினர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்ததை அடுத்து தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுக கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.
டிடிவி தினகரன் அணியில் இருக்கும் தங்க தமிழ்செல்வன், தங்களுக்கு 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது கருணாஸ், ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் முதல்வருக்கான ஆதாரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
இதனால் தற்போது டிடிவி தினகரன் அணிக்கு வெளிப்படையாக 22 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
