தொடர்புடைய செய்திகள்
- முதல்வர் பழனிசாமி’ கால்களுக்குள் நெளிந்து’ போவார்!” - ஸ்டாலின் ’கிண்டல்’
- இதுக்கு பேசாம பாஜகவில் சேர்ந்திடலாம்...ராஜேந்திர பாலாஜியை கிண்டல் செய்த சீமான் !
- ராமதாஸ் மறந்த, மறைத்த சிலதை கிளறும் முரசொலி!!
- நாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெளியூர்க்காரர்கள் இருக்ககூடாது..
- ’வடக்கூரான் ஸ்டாலின்’ அடே போதும்டா தலைவரு பாவம்... தொண்டர்கள் மைண்ட்வாய்ஸ்!!
”ஊழலில் ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற கட்சி அதிமுக”.. விளாசும் துரைமுருகன்
விக்கிரவாண்டி நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது.
இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளரான நா.புகழேந்தியை ஆதரித்து பேசிய திமுக பொருளாளர் துரை முருகன், “அதிமுக ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற கட்சி தான், ஆனால் ஊழலில் ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற கட்சி” என கூறியுள்ளார்.
முன்னதாக இது போல் அதிமுகவினரை தனது நகைச்சுவை உணர்வோடு விமர்சித்து வரும் துரைமுருகன், தற்போதும் அதே பாணியில் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
