1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Actres kasthuri comment on aadhar verdict

தலையை சுத்தி மூக்கை தொட்டு ஆதார் கட்டாயம் - கஸ்தூரி கிண்டல்

Aadhar card
ஆதார் அட்டை குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார்.

 
ஆதார் அட்டை குறித்து இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதார் கார்டு செல்லும். ஆனால், கட்டாயமில்லை என அவர்கள் தீர்ப்பு வழங்கினர். 
 
அதாவது, அதிகப்படியாக பண வர்த்தனை செய்பவரை கவனிப்பதற்காக பயன்படுத்தப்படும் பேன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஆனால், வங்கிக் கணக்கு, தொலைப்பேசி சிம் கார்டு, கேஸ் இணைப்பு, நீட் தேர்வு ஆகிய விவகாரங்களுக்கு ஆதார் கட்டாயமில்லை எனவும், ஆதாரை காரணம் காட்டி மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படக்கூடாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
 
வங்கி கணக்கிற்கு ஆதார் தேவையில்லை. ஆனால், பேன் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். பேன் கார்டு இல்லாமல் எந்த வங்கியும் கணக்கு திறப்பதில்லை. எனவே, எப்படிப் பார்த்தாலும் ஆதார் அட்டை இல்லாமல் வங்கி கணக்கு திறக்க முடியாது என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர். 
 
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “வங்கி கணக்குக்கு ஆதார் தேவையில்லை. ஆனால் பான் கார்டு தேவை. பான் கார்டு ஆதார் இணைப்பு கட்டாயம்.  அப்படின்னா, தலையை சுத்தி மூக்கை தொட்டு  கடைசியிலே  ஆதார் கட்டாயம்னு...” என பதிவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
டேட்டா தனி, எஸ்எம்எஸ் தனி: ஏர்டெல் தில்லாலங்கடி ஆஃபர்!