1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. aadahav arjuna talk about admk alliance

அதிமுக கூடாரம் காலியாகப் போகுது!.. எங்களுக்கு தேவையே இல்ல!.. ஆதவ் அர்ஜுனா..

aadhav
தவெக தலைவர் விஜய் அரசியல் கட்சி துவங்கியதில் இருந்தே திமுகவை மட்டுமே கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இப்போது களத்தில் இருப்பவர்களை பற்றித்தான் பேச முடியும்.. மற்றவர்கள் பற்றி பேச தேவை இல்லை என்று சமீபத்தில் நடந்த ஈரோடு பொதுக்கூட்டத்திலும் அவர் பேசியிருந்தார்.

சமீபத்தில் அந்த கட்சியில் சேர்ந்த நாஞ்சில் சம்பத் கூட ‘ஏன் நீங்கள் பாஜகவை விமர்சிப்பதில்லை?’ என கேட்டதற்கு ‘அதற்கு நேரம் இருக்கிறது.. அதற்கான தேர்தல் இதுவல்ல.. பாராளுமன்ற தேர்தலில் அவர்களை எதிர்ப்போம்.. இப்போது திமுகவை மட்டுமே எதிர்ப்போம்’ என்று விஜய் சொன்னதாக நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறினார்.

‘களத்தில் இல்லாதவர்களை எதிர்ப்பது எங்கள் வேலை அல்ல.. எங்களுக்கு வேறு வேலை இருக்கிறது’ என்று ஈரோடு பொதுக்கூட்டத்தில் பேசி இருந்தார் விஜய். இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா ‘எங்க தலைவர்தான் தமிழகத்தின் எதிர்காலம்னு தெரிஞ்ச பிறகு செங்கோட்டையன் போல இன்னும் பல பேர் வரப்போகிறார்கள். அதிமுக கூட்டணியே காலியாக போகுது. அப்ப நாங்க ஏன் அதிமுகவை எதிர்க்கணும்?.. 30 சதவீதத்துக்கு மேல ஓட்டு வச்சிருக்க நாங்க ஏன் கூட்டணி வைக்கணும்?.. வாழ்க்கையை விட்டுட்டு வந்திருக்கும் எங்க தலைவரை முதல்வர் ஆக்காம இன்னொருத்தர நாங்க முதல்வர் ஆக்கணுமா?’ என்று அவர் கேள்வி அனுப்பினார்.

மேலும் ‘அண்ணன் செங்கோட்டையன் நினைத்திருந்தால் பாஜகவுக்கு சென்று கவர்னராகவோ அல்லது மத்திய அமைச்சராக ஆகியிருக்க முடியும்.. இல்லனா திமுகவுக்கு போய் நாளைக்கே அமைச்சராக மாறியிருக்கலாம்.. ஆனால், நம்ம தலைவர்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் என புரிந்து கொண்டதால் இங்கு வந்தார்’ என்று பேசியிருக்கிறார்.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
தற்போதைய ஆட்சியாளர்களும் நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலை வரும்: வங்கதேச பிரபலம் எச்சரிக்கை..!