1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (16:01 IST)

2000 ரூபாய்க்காக சிறுவனை கொலை செய்த வாலிபர் கைது

வீட்டு வாடகை செலுத்த சிறுவனை கொலை செய்து கிணற்றில் வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அழகாபுரி புதுமனை 2-வது தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் கிஷோர்குமார்(8). சிறுவன் 4-ம் வகுப்பு படித்து வந்தான். சிறுவன் வீட்டின் அருகிலிருந்த விளையாட்டு மைதானத்தில், சிலர் கபடி விளையாடுவதை பார்த்துக்கொண்டிருந்தான். கபடி விளையாடிக் கொண்டிருந்த வினோத் என்ற வாலிபர் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை சிறுவன் கிஷோர்குமாரிடம் பார்த்துக்கொள்ளும்படி கொடுத்துள்ளார்.
 
இதனையறிந்த விக்னேஷ்(20) என்ற வாலிபர், கிஷோர்குமாரிடம் நைசாக பேசி செல்போனை பறிக்க முயன்றுள்ளார். ஆனால் சிறுவன் மசியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு பிணத்தை அருகிலிருந்த கிணற்றில் வீசிவிட்டான்.
இதனையடுத்து சிறுவனை கிணற்றில் இருந்து மீட்ட போலீஸார், கொலை குறித்து விசாரனை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் விக்னேஷை கைது செய்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில் சிறுவனை தான் கொலை செய்ததாகவும், வீட்டு வாடகை செலுத்த 2000 ரூபாய் பணம் தேவைபட்டதால், சிறுவனிடம் செல்போனை திருடி, அவனை கொலை செய்ததாகவும் தெரிவித்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.