வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 9 ஏப்ரல் 2018 (12:33 IST)

மனைவியை கொலை செய்து நாடகமாடிய அர்ச்சகர் கைது!

சென்னை வடபழனி பகுதியில் உள்ள கோயில் அர்ச்சகர் மனைவி கொலை வழக்கில் அவரது கணவர் மற்றும் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
சென்னை வடபழனி பகுதியில் உள்ள சிவன் கோயில் அர்ச்சகரின் மனைவி கடந்த 5ஆம் தேதி தனது வீட்டில் கொலை செய்யப்பட்டார். அவரது கணவர் பாலகணேஷ் கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மர்ம நபர்கள் அவரையும் தனது மனைவியையும் கட்டிபோட்டுவிட்டு 15 பவுன் நகைகளை திருடிச் சென்றதாக பாலகணேஷ் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
 
காவல்துறையினர் தொடர்ந்து விசாராணை நடத்தினர். கண்காணிப்பு கேமராக்களில் பாலகணேஷ் வீடு பக்கம் யாரும் செல்லாதது தெரியவந்தது. இதனால் பாலகணேஷ் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
 
பாலகணேஷ் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பலகணேஷ் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். நாடகமாடிய பாலகணேஷை இந்த வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர்.