வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2019 (16:51 IST)

’வாட்ஸ் ஆப்பில் ’ அத்துமீறிய மனைவி... தூக்கில் தொங்கிய கணவர்

கோவையிலுள்ள சரவணம்பட்டியைச்  சேந்தவர் அர்ஜுனன் (46). இவர் டெய்லராக வேலைசெய்து வந்தார். இவரது மனைவி அலமேலு (40). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்கு யோகேஷ் என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்துவந்தார்.
இந்நிலையில் நேற்று வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீட்டுக்குத் திரும்பிய அலமேலு,வீடு உள்பக்கமாய் பூட்டியிருந்ததால் ஜன்னலைத் திறந்துபார்த்துள்ளார்.
 
உள்ளே தனது கணவரும், மகனும் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்ப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 
 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் தந்தை, மகன் இருவரது சடலத்தையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
அதன் பிறகு வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அர்ஜூன் எழுதிவைத்திருந்த கடிதம் கிடைத்தது. அதில் அலமேலு வேறொரு நபருக்கு தகவல் அனுப்பிய தகவலைப் பார்த்து மனம் நொந்து போட் அதைப் பற்றிய தகவல்களை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் பின்னர் தன் மகனுகு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு,தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
தற்போது இதுகுறித்து போலிஸார் மேலும் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.