வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 5 ஜனவரி 2019 (10:42 IST)

மாமனாருடன் கள்ள உறவு: கேடுகெட்ட மருமகள்: கடைசியில் நேர்ந்த சோகம்

வேலூரில் மாமனாருடன் தகாத உறவில் ஈடுபட்டதால் ஏற்பட்ட சோக சம்பவம் பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தனசேகர். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். ஜெயந்திக்கு அவரது மாமனார் கோபாலகிருஷ்ணனுடன் தகாத உறவு இருந்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோபாலகிருஷ்ணன் தனது மருமகள் ஜெயந்தி மற்றும் இரு பேத்திகளை அழைத்துக்கொண்டு வேளாங்கண்ணிக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி, தங்களது உல்லாசத்திற்கு தடையாய் இருந்த இரு குழந்தகளை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
 
பின்னர் அங்கிருந்து சென்ற இவர்கள், போலீஸில் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். கேவலம் தங்களின் பாலியல் இச்சைக்காக இரண்டு குழந்தைகளை அநியாயமாக கொலை செய்த இந்த ஜந்துக்களுக்கு இந்த முடிவு சரியானது தான்.