தொடர்புடைய செய்திகள்
- குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை கேட்ட செந்தில் பாலாஜி மனு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!
- திமுக-வை சேர்ந்த 15 நபர்களுக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு- நீதிமன்றம் உத்தரவு
- அமைச்சர் செந்தில் பாலாஜி காவல் முடிந்தது.. நீதிமன்றத்தில் ஆஜர்..!
- கமல்ஹாசன் பட நடிகைக்கு ஆறுமாதம் சிறை தண்டனை.. சென்னை நீதிமன்றம் உத்தரவு!
- போக்சோ சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்: அலகாபாத் உயர்நீதிமன்றம்
சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் அளித்த மாணவியை ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு..!
சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் அளித்த மாணவியை காணொளி மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவசங்கர் பாபா தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் மாணவி புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக கூறப்படும் மாணவி மின்னஞ்சல் மூலம் அளித்த புகாரின் உண்மை தன்மை குறித்து சிவசங்கர் பாபா தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
கேளம்பாக்கம் சர்வதேச பள்ளியில் படித்த அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் எனவே அவரை நேரில் ஆஜராக செய்து அவரிடம் விசாரிக்க வேண்டும் என்றும் சிவசங்க பாபா தரப்பில் இருந்து கேட்கப்பட்டது.
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட மாணவியை காணொளி மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
Edited by Mahendran
