தொடர்புடைய செய்திகள்
- இன்று காலை 10 மணி வரை 16 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!
- சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை! குளிர்ச்சியான தட்பவெப்பத்தால் மக்கள் மகிழ்ச்சி..!
- அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை! – வானிலை ஆய்வு மையம்!
- கழிவு நீரை, மழை நீர் வடிகாலில் வெளியேற்றிய நிறுவனங்களுக்கு அபராதம்
- இன்று 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை எச்சரிக்கை..
அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
அரபிக்கடலில் அக்டோபர் 17ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 20 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் அக்டோபர் 17ஆம் தேதி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால் இந்த மலை மேலும் நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறி புயலாக மாறுமா என்பதையும் இந்தியா வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
