தொடர்புடைய செய்திகள்
- பள்ளியில் மாணவிக்கு தாலிகட்டிய மாணவன்....வைரலாகும் புகைப்படம்
- தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறப்பு: மாணவ மாணவிகளுக்கான நிபந்தனைகள்!
- 7 அரசு பள்ளி மாணவிகளின் மருத்துவப் படிப்புச் செலவை ஏற்ற திமுக!
- தனியார் மருத்துவ கல்லூரி கட்டணம் கட்ட முடியாத 3 மாணவிகள்: தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை
- அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் மாணவ, மாணவிகள் வேதனை ?
மருத்துவ கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ்: மாணவி மீது வழக்குப்பதிவு!
மருத்துவ கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ்
மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கலந்தாய்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அந்த மாணவி மற்றும் அவரது தந்தை மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
மருத்துவ கல்லூரி கலந்தாய்வில் கடந்த 7ஆம் தேதி கலந்துகொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அளித்த சான்றிதழில் சந்தேகம் எழுந்ததால் அது குறித்து மருத்துவ கல்லூரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்
விசாரணையில் மாணவி அளித்தது போலியான மதிப்பெண் சான்றிதழ் என தெரியவந்தது. இதனையடுத்து அந்த மாணவி மீதும் அவரது தந்தை மீதும் மருத்துவ இயக்குனர் கல்வி இயக்குனரக கூடுதல் இயக்குனர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மாணவி மற்றும் அவரது தந்தை ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
அடுத்த கட்டுரையில்
