தொடர்புடைய செய்திகள்
- சுர்ஜித்திற்காக பிரார்த்திக்கிறேன்..பிரதமர் மோடி டிவிட்
- ரிக் இயந்திரத்திற்கு பதில் போர்வெல்: இடைவிடாத மீட்பு பணி
- இரண்டாவது ரிக் பழுதடைந்தது.. பழுது பார்க்கும் பணியில் தீவிரம்
- நானும் ஒரு குழந்தையோட தகப்பன்...நீ வந்தாதான் தீபாவளி...எழுந்து வா தங்கமே - ஹர்பஜன் சிங் உருக்கம் !
- ஆழ்துளை கிணற்றில் 100 அடியில் குழந்தை :சூப்பர் ஸ்டார் மனைவி வேண்டுகோள் !
தோல்வியில் முடிந்த 80 மணி நேரப் போராட்டம்! சடலமாக மீட்கப்பட்ட சுஜித் உடல்!
கடந்த வெள்ளியன்று நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறி விழுந்த சுஜித் என்ற 2 வயது சிறுவனை மீட்க கடந்த 80 மணி நேரமாக நடந்த மீட்புப்போராட்டம் தோல்வியில் முடிந்தது
இன்று அதிகாலை 2 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வந்ததை அடுத்து சுஜித் இறந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்து அதன்பின் சுஜித்தின் உடலை இரண்டு மணி நேரம் போராடி தேசிய மீட்புப்படையினர் மீட்டனர்.
சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது மருத்துவர் குழு ஒன்றால் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பின் சுஜித்தின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு அதன்பின் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. மருத்துவமனையில் சுஜித்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர்கள், அதிகாரிகள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
