1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 64 labours happened in egmore hospital

ஒரே நாளில் 64 குழந்தைகள் பிறந்தன… எழும்பூர் மருத்துவமனை சாதனை!

கொரோனா
சென்னையில் உள்ள எழும்பூர் மக்ப்பேறு மருத்துவமனையில் நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டும் 64 குழந்தைகள் பிறந்துள்ளன.

சென்னை எழும்பூரில் மகப்பேறு மருத்துவமனை உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 64 குழந்தைகள் பிறந்துள்ளன. இது சமீப காலமாக அங்கு நடக்காத ஒரு நிகழ்வாகும். இங்கு வழக்கமாக சராசரியாக நாள்தோறும் 50 முதல் 55 பிரசவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் நான்கு குழந்தைகள் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறந்தவையாகும். இந்த 64 குழந்தைகளில் 43 ஆண் குழந்தைகள், 21 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதில், 60 சதவீதம் சுகப் பிரசவமாகவும், 40 சதவீதம் அறுவை சிகிச்சை வாயிலாகவும் பிறந்துள்ளன.