1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 46% increase in dearness allowance for temple workers from 1st July

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 46%ஆக உயர்வு: தமிழக அரசு உத்தரவு

திருக்கோவில்
திருக்கோயில் பணியாளர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி 46%ஆக உயர்வு என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
ஏற்கனவே 42%ஆக அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 4% உயர்த்தப்பட்டு 46% என வழங்கப்படவுள்ளது.
 
அகவிலைப்படி விவகார்த்தில் அனைத்து சார்நிலை அலுவலர்கள் தமிழக அரசின் அறிவிப்பை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 சமீபத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 42%ல் இருந்து 46 சதவீதமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில் தற்போது அடுத்த கட்டமாக திருக்கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அமைச்சர் ஏ.வ.வேலு வீடு மட்டுமல்ல.. பல இடங்களில் ஒரே நேரத்தில் ஐடி ரெய்டு..!