1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 3 arrested for burying friend alive

அஜித்குமாரை உயிருடன் புதைத்த 3 பேர் கைது!

அஜித்குமார்
அஜித்குமாரை உயிருடன் புதைத்த 3 பேர் கைது!
வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கவில்லை என்பதற்காக அஜித் குமார் என்பவரை அவருடைய நண்பர்கள் 3 பேர் உயிரோடு புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்தையாபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் தனது நெருங்கிய நண்பர்களிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது/ ஆனால் வாங்கிய கடனை திருப்பி தர மறுப்பதாக கூறப்பட்ட நிலையில் மூன்று பேரும் மது போதையில் அஜீத் குமாரை உயிரோடு புதைத்துள்ளனர்
 
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் அஜீத் குமாரை மீட்டு மூன்று பேரையும் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் 
 
தற்போது அஜித்குமார்  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
வங்கி ஊழியர்களுக்கு பரிசு