1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 17 districts to have rain within next 2 hours

அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை – எங்கெங்கு?

தமிழகம்
இன்று தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பொழியும் என கணிப்பு.


தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வரும் நிலையில், சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் தற்போது தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது என்றும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகம் மற்றும் புதுவை இடையே இன்று கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் இன்று தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பொழியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, மதுரை, தருமபுரி, நாமக்கல் ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
10% இடஒதுக்கீட்டை நிராகரிக்கிறோம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்