தொடர்புடைய செய்திகள்
- மதரஸா பள்ளிகள் சட்டம் 2004 செல்லாது-அலகாபாத் உயர் நீதிமன்றம்
- ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
- மோடி ரோடு ஷோவுக்கு மாணவர்கள் செல்லவில்லை.. பிரதமர் மோடிதான் பள்ளி வழியாக சென்றார்! – விசாரணையில் திருப்பம்!
- கனடாவில் கல்வி கற்க செல்லும் இந்திய மாணவர்களின் கனவு சிதைவது எப்படி?
- அனுமன் வேடத்தில் சிறுவர்கள்! பிரதமர் மோடி ரோடு ஷோவில் தேர்தல் விதிமுறைகள் மீறல்? - கலெக்டர் விசாரணை!
நீட் தேர்வு.. தமிழகத்தில் மட்டும் 1.55 மாணவர்கள் விண்ணப்பம்..!
2024 ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 1.55 லட்சம் பேர் விண்ணிப்பித்துள்ளதாகவும், நாடு முழுவதும் 23 லட்சத்து 81,833 பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது
2024ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி தொடங்கி, மார்ச் 16 ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில், இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 23 லட்சத்து 81,833 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1.55 லட்சம் பேர் விண்ணிப்பித்துள்ளதாகவும், அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 3,39,125 பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
2022-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 18.72 லட்சம் பேரும், கடந்த ஆண்டில் 20.87 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த ஆண்டு அதிகமானோர் விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
