1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 105 year old man casted his votes in all elections

இந்தியாவின் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த முதியவர்!

கோவை
கோவையைச் சேர்ந்த மாரப்பன் என்ற 105 வயது முதியவர் 1952 முதல் அனைத்து தேர்தலிலும் வாக்களித்துள்ளார்.

கோவை மாவட்டம் கருப்பராயன் பாளையத்தில் 1916-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி பிறந்த மாரப்பன் தாத்தாவுக்கு தற்போது அவரது வயது 105. நேற்று அவர் வாக்கு செலுத்தி தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். இவர் 1952 ஆம் ஆண்டு தொடங்கி நடந்த அனைத்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் வாக்கு செலுத்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.