1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 ஜூலை 2020 (08:19 IST)

ஆட்சியை கவிழ்க்க செப்டம்பர் எதுக்கு? இப்பவே செய்யுங்க! – பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியின் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக கூறியுள்ள உத்தவ் தாக்கரே வெளிப்படையான பதிலையும் அளித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜகவோடு சேர்ந்து சட்டசபை தேர்தலை எதிர்கொண்டாலும், பிறகு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது சிவசேனா. இந்நிலையில் சிவசேனாவின் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக அடிக்கடி சிவசேனா கட்சியினார் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே “மராட்டியத்தில் அமைந்துள்ள மகா விகாஷ் அகாடி கூட்டணியானது மூன்று சக்கரங்களை உடைய ஆட்டோவை போன்றது. இது மக்களுக்கான வாகனம். அதன் ஸ்டியரிங்கை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த ஆட்சி ஜனநாயகத்திற்கு எதிரானது என்றால், இந்த ஆட்சிடை கவிழ்க்க நீங்கள் திட்டமிடுவது மட்டும் ஜனநாயக முறையிலானதா? எங்கள் ஆட்சியை கவிழ்க்க ஏன் செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டும்? முடிந்தால் இப்போதே கவிழ்க்கலாமே” என கூறியுள்ளார்.

மேலும் “காங்கிரஸுடன் சிவசேனாவுக்கு ஏற்பட்டது சிறிய அளவிலான முரண்பாடுதான். அதையும் பேசி சரிசெய்தாகிவிட்டது. இதுகுறித்து சோனியாகாந்தியுடன் கலந்துரையாடினேன்” என கூறியுள்ளார்.